திண்டுக்கல்லில் செயல்பாட்டுக்கு வந்த சுங்கச் சாவடி - அடித்து நொறுக்கிய பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரத்தில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி பல மாதங்களாக நடைபெற்று வந்தது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து நான்கு வழிச்சாலையாக மாற்றி சுங்கச்சாவடி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், நான்கு வழிச்சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் இரு வழிச்சாலை பணிகள் மட்டுமே முடிந்த நிலையில் சுங்கச்சாவடி இன்று காலை 10 மணிமுதல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி பணம் வசூலிப்பதற்கான கவுண்டர்கள் அமைக்கப்பட்டு ஊழியர்களுக்கான அறை மற்றும் கணினிகள் கொண்டு வரப்பட்டன. 

இந்த நிலையில், நான்கு வழிச்சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல், சுங்கச்சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டனர். மேலும், அங்கிருந்த பெயர் பலகை, கவுண்டர்களை அடித்து நொறுக்கினர். 

அவர்களைத் தடுக்க வந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுங்கச்சாவடியில் இருந்த அனைத்து பொருட்களும் சேதமடைந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

peoples collapse toll gate in dindukal


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->