ஆசை வார்த்தை கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. வாலிபர் கைது..! - Seithipunal
Seithipunal


திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுச்சேரி மாவட்டம், சேத்தூர், பண்டாரவாடை கிராமத்தை சேர்ந்தவர் தீபா. இவர் மயிலாடுதுறை பகுதி காவேரி நகரை சேர்ந்த யபேஷ் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனை அடுத்து, தீபா அவரை திருமணம் செய்து கொள்ளகோரி பலமுறை கேட்டுள்ளார். ஆனால், அதற்கு மறுத்ததோடு காதலித்த போது எடுத்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாகவும்  கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து தீபா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் யபேஷ்  அவரது சகோதரி ஜபசீலி (37), ஜபசீலி கணவர் இன்பராஜ் (39)  ஆகியோரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth arrested near Karaikal


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->