கிருஷ்ணகிரி: விஷம் குடித்த இளைஞர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விஷம் குடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மத்தூர் அருகே புட்டன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் சந்துரு (22). இந்நிலையில் சம்பவத்தன்று சந்துரு பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், சந்துருவை மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சந்துரு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்துரு பூச்சி மருந்து குடிப்பதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth dies after drinking poison in kirishnagiri


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->