பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து 18 பேர் பலி..நைஜீரியாவில் சோகம்! - Seithipunal
Seithipunal


நைஜீரியாவில் டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் தீப்பற்றி வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இம்மாத தொடக்கத்தில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி வெடித்து சிதறி 98 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள இனுகு மாகாணத்தில் நேற்று மாலை டேங்கர் லாரி ஓன்று பெட்ரோல் ஏற்றிக்கொண்டு  சென்றுகொண்டிருந்தது. அப்போது இனுகு-ஒனிஸ்டா தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்றுகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி முன்னே சென்ற வாகனங்கள் மோதியது.  

இந்த விபத்தில் சிக்கியதுடேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் தீப்பற்றி வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும்  மேலும், பலர் படுகாயமடைந்தனர் என முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விபத்து குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இதில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.மேலும் இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தால் நைஜீரியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 இம்மாத தொடக்கத்தில் நைஜீரியாவின் நிஜர் மாகாணத்தில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி வெடித்து சிதறி 98 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

18 killed as petrol tanker explodes Tragedy in Nigeria


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->