ஆப்கானிஸ்தான்: எண்ணெய் டேங்கர் லாரி வெடித்து பயங்கர தீ விபத்து - 19 பேர் பலி - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் எண்ணெய் டேங்கர் லாரி வெடித்ததில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பர்வான் மாகாணத்தில் உயரமான சலாங் கணவாயில் எண்ணெய் டேங்கர் லாரி கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் டேங்கர் லாரி தீ பிடித்து வெடித்ததில் மற்ற வாகனங்களுக்கும் தீ வேகமாக பரவியது.

இதையடுத்து தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 37 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹமிதுல்லா மிஸ்பா தெரிவித்துள்ளார். சலாங் கணவாயில் ஏற்பட்ட இந்த விபத்தினால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மலைப்பாதையின் இருபுறமும் பயணிகள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

19 died in oil tanker lorry explosion and fire in Afghanistan


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->