தமிழக மீனவர்கள் 3 பேருக்கு 18 மாத சிறை தண்டனை விதித்த இலங்கை நீதிமன்றம் - 23 மீனவர்கள் விடுதலை ..!! - Seithipunal
Seithipunal


இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட 3 தமிழக மீனவர்களுக்கு தலா 18 மாதம் சிறை தண்டனையும், 5 படகுகளை அரசுடைமையாக்கியும், மேலும் 23 தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுவித்தும் இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த ஜூன் 30ம் தேதியன்று ராமேஸ்வரம் பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற இருதயராஜ், ஸ்டீபன், ஜார்ஜ் ஆகியோருடைய 3 நாட்டுப் படகுகள், மற்றும் நம்புதாளை பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற பெரியசாமி என்பவருடைய நாட்டுப்படகு என மொத்தம் 4 நாட்டுப் படகுகளுடன், அதிலிருந்த   25 மீனவர்களையும் இலங்கைக் கடற்படை கைது செய்தது. 

அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கடலுக்குச் சென்ற சிபிராஜ், செல்வகுமார், மணிகண்டன், நைனா முகமது ஆகியோருடைய 4 விசைப் படகுகளும், அதில் இருந்த 17 மீனவர்களும் சிறைபிடிக்கப் பட்டனர். இந்நிலையில் இந்த 42 தமிழக மீனவர்களும் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 30) ஆஜர்படுத்தப் பட்டனர். 


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஸ்கரன் பாம்பன் மற்றும் நம்புதாளையைச் சேர்ந்த 3 நாட்டுப் படகுகளையும், புதுக்கோட்டையைச் சேர்ந்த 2 விசைப் படகுகளையும் அரசுடைமையாக்கி உத்தரவிட்டார். இரண்டாம் முறையாக பிடிபட்ட 3 மீனவர்களுக்கு தலா 18 மாதம் சிறைத் தண்டனையும், மற்ற 23 மீனவர்களுக்கு எச்சரிக்கையுடன் விடுவித்தும் உத்தரவிட்டார். 

இதையடுத்து மீதமுள்ள 16 மீனவர்களுக்கு ஆகஸ்ட் 8ம் தேதி  வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

23 TN Fishermen Released and 3 Fishermen Got Imprisonment for 18 Months By Srilankan Court


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->