ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிபப்பு.! போலீஸ் தலைமை அதிகாரி உட்பட 3 பேர் பலி
3 police died in bomb blast in Afghanistan
ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் போலீஸ் தலைமை அதிகாரி உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் படாஸ்கான் மாகாணத்தின் தலைநகர் பைசாபாத்தில் போலீஸ் தலைமையகம் அமைந்துள்ளது. அங்கு வழக்கம் போல் போலீசார் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது போலீஸ் தலைமை அதிகாரி காரில் வரும் பொழுது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் காரின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
மேலும் ரிக்சாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தனர். இந்த தாக்குதலில் போலீஸ் தலைமை அதிகாரி உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் இரண்டு போலீசார் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் தொடர்பாக சந்தேகத்திற்குரிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
3 police died in bomb blast in Afghanistan