ஆப்கானிஸ்தான் தலைநகரில் தற்கொலைப்படை தாக்குதல் - 5 பேர் பலி - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் தலிபான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தலிபான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வெளியே நேற்று மாலை சுமார் 4 மணியளவில் தற்கொலைக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட உள்ளது. மேலும் தற்கொலை குண்டுதாரி அமைச்சக வளாகத்திற்குள் நுழைய முயன்றுபோது குண்டுவெடித்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் இது குறித்து காபூல் காவல்துறைத் தலைவர் காலித் சத்ரன், இஸ்லாமிய எமிரேட் முஸ்லீம்கள் மீதான இத்தகைய நோக்கமற்ற மற்றும் கோழைத்தனமான தாக்குதலைக் கண்டிக்கிறது என்றும், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் தீய செயல்களுக்காக தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 killed in suicide bomb attack in Afghanistan Kabul


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->