நைஜீரியா: பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து - 6 பேர் பலி
6 dead dozens injured as train collides with bus in Nigeria
நைஜீரியாவின் லாகோஸில் பயணிகள் பேருந்து மீது ரயில் மோதிய பயங்கர விபத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானோர் காயமடைந்தனர்.
நைஜீரியாவின் லாகோஸில் நகரில் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து இகேஜா பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது. அப்பொழுது அவ்வழியாக வேகமாக வந்த ரயில் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் பயணித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் டஜன் கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர், விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 84 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதில் ரயிலில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மேலும் அரசு ஊழியர்களை வேலைக்கு அழைத்துச்சென்றபொது பேருந்து ரயிலுடன் மோதி விபத்து ஏற்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் அனைவரும் பேருந்தில் இருந்தவர்கள் என்று நைஜீரியாவின் தேசிய அவசரகால மேலாண்மை அமைப்பின் தலைவர் இப்ராஹிம் ஃபாரின்லோயே தெரிவித்துள்ளார்.
English Summary
6 dead dozens injured as train collides with bus in Nigeria