ஆப்கானிஸ்தானில் அதிரடி தாக்குதல் - ஐ.எஸ். பயங்கரவாதிகள் உட்பட 8 பலி
8 including IS terrorist killed in Taliban attacks in Afghanistan
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் புத்தாண்டு தினத்தன்று ராணுவ விமான நிலையத்தில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு மற்றும் முன்பாக சீனர்களின் லாங்கன் ஓட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் காபூர் மற்றும் நிம்ராஸ் மாகாணத்தில் பதுங்கி இருப்பதாக தலீபான்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து தலீபான்கள் தலைநகர் காபூலில் பயங்கரவாதிகள் மறைந்திருந்த இடத்தில் அதிரடி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 8 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் 7 பயங்கரவாதிகளை கைது செய்தனர். இதேபோல் நிம்ராஸ் மாகாணத்தில் நடத்திய தாக்குதலில் 2 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்தனர்.
மேலும் கையெறி குண்டுகள், கண்ணி வெடிகள், வெடிமருந்துகள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தலீபான்கள் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் தெரிவித்துள்ளார்.
English Summary
8 including IS terrorist killed in Taliban attacks in Afghanistan