திபெத்தில் 4.5 ரிக்டரில் அளவில் மீண்டும் நிலநடுக்கம்..!
Another earthquake in Tibet
தீபத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் இது அமைந்துள்ளது.

கடந்த 07-ஆம் தேதி திபெத்தின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று மதியம் 3.03 மணியளவில் (இந்திய நேரப்படி) அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது 5 கி.மீ. ஆழத்தில், 29.10 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 87.66 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
English Summary
Another earthquake in Tibet