ஆப்பிரிக்க நாட்டில் மீண்டும் எபோலா தொற்று பரவல்; ஒருவர் பலி; உலக நாடுகள் அச்சம்..! - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆப்பிரிக்க மீண்டும் எபோலா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. எபோலா வைரஸ் தொற்று ஆபிரிக்க நாட்டின் ஆற்றங்கரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் 1976-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. 

2014 முதல் 2016-ஆம் ஆண்டில் எபோலா தொற்றால் சுமார் 11 ஆயிரம் பேர் இறந்தனர். அதன் பின்னர் இந்த எபோலா வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தற்போது கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. 

வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள்  தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே தலைநகர் கம்பாலாவில் ஒரு நர்சு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்த ஆண்டு எபோலா தொற்றுக்கு பலியான முதல் நபர் இவர் ஆவார். இதனையடுத்து, அங்கு சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ebola infection spreads again in Africa


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->