ஈரான் : ஹமாஸ் தலைவர் மரணம் 2 மாதங்களுக்கு முன்பே திட்டமிடப் பட்டதா..?! வெளியான அதிர்ச்சித் தகவல்.. !! - Seithipunal
Seithipunal


 

 

கடந்த ஜூலை 30 செவ்வாய்க் கிழமை அன்று ஈரான் நாட்டின் புதிய அதிபரின் பதவியேற்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். அப்போது அவர் ஈரானில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்து ஈரானின் மிக உயரிய அதிகாரம் பெற்ற அயதுல்லா அலி கமேனியை சந்தித்துப் பேசியுள்ளார். இதையடுத்து அவர் தங்கியிருந்த வீட்டிலேயே வெடிகுண்டு வைத்துப் படுகொலை செய்யப் பட்டார்.

 

இதையடுத்து இஸ்ரேல் தான் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலைக்கு காரணம் என்று ஹமாஸ் அமைப்பும், ஈரானும் நம்புகின்றன. இந்நிலையில் இது குறித்து அமெரிக்கா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் வழக்கமாக ஈரான் செல்லும்போது தெக்ரானில் உள்ள வீட்டில் தான் தங்குவார். 

புரட்சிகர காவல்படையினரின் ரகசிய கூட்டங்கள் நடக்கும் வளாகத்திற்குள் தான் அந்த வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் தற்போது அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் அளித்த தகவலின் படி 2 மாதங்களுக்கு முன்பே அந்த வீட்டிற்குள் வெடிகுண்டு மறைத்து வைக்கப் பட்டுள்ளது. 

 

இதையடுத்து கத்தார் நாட்டில் ஒரு அரசியல் சந்திப்பை முடித்து விட்டு, ஈரான் அதிபரின் பதவியேற்பு விழாவிற்கு வந்த இஸ்மாயில் , தெக்ரான் வீட்டில் தான் உள்ளார் என்பதை உறுதி செய்து கொண்ட எதிர் தரப்பினர், ஏற்கனவே அங்கு புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை ரிமோட் மூலம் வெடிக்க வைத்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hamas Leader Murder Pre Planned Before 2 Months


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->