ஜப்பானில் 'மீண்டும்' நிலநடுக்கம்: பீதியில் மக்கள்! - Seithipunal
Seithipunal


ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. 

மத்திய ஜப்பான் கடற்பகுதியை ஒட்டிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.0 பதிவாகி பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பொருட்கள் சேதம் மற்றும் உயிர் சேதம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 

இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் ஜப்பான் அணுமின் நிலையம் உள்ளது எனவும் அங்கு எற்பட்ட சேதம் குறித்தும் தகவல் வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் ஜப்பான் அரசாங்கம் சார்பில் விடுக்கப்படவில்லை. ஏற்கனவே மேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக கடுமையான பாதிப்பு ஜப்பானில் ஏற்பட்டுள்ளது. 

முன்னதாக நூற்றுக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜப்பானின் மற்றொரு பக்கத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியுள்ளது. தென்கொரியா, வடகொரியா பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தினால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டுள்ளதா என சர்வதேச நிலநடுக்க ஆய்வு மையம் கவனித்து வருகிறது. 

ஜனவரி மாதம் முழுவதும் ஜப்பான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படுவதற்காக வாய்ப்பு உள்ளது எனவும் சுனாமி எச்சரிக்கை விட வாய்ப்புள்ளதாகவும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Japan again Earthquake People panic


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->