நடந்து சென்ற இளம்பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் - போலீசார் அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலம் பெங்களூரு பென்னிகானஹள்ளி பகுதியில் அமைந்துள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தின் அருகே பயணிகள் வசதிக்காக நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து வந்துள்ளார்.

அப்போது அவருக்கு பின்னால் வந்த மர்மநபர் ஒருவர் திடீரென அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் சம்பவ இடத்தில் யாரும் இல்லாததால் உடனடியாக அங்கிருந்து ஓடி மெட்ரோ நிலைய ஊழியரிடம் தகவல் தெரிவித்தார்.

உடனே அந்த ஊழியர் மர்மநபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் மதுபோதையில் இருந்ததும், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man arrested for harassment in banglore


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->