நைஜீரியா | அடுத்தடுத்த வெடித்த குண்டுகள்! கர்ப்பிணி பெண்கள் உள்பட 18 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


நைஜூரியாவில் அடுத்தடுத்த 3 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

நைஜூரியா, வடக்கு போர்னோ மாநிலத்தில் உள்ள குவோசா நகரில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் திருமண விழாவில் குழந்தைகளுடன் வந்த ஒரு பெண் தன்னிடம் இருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார். 

இதனை தொடர்ந்து மருத்துவமனை, இறுதிச் சடங்கு என அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டு சம்பவங்கள் நடைபெற்றது. இந்த தாக்குதலில் குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

மேலும் 48 பேருக்கு காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

மேற்கு அமெரிக்க நாடான நைஜூரியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து அரசுக்கு எதிரான தாக்குதல் நடைபெற்று வருகிறது மேலும் பொதுமக்களை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டுவது போன்ற செயல்களும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nigeria Subsequent explosions 18 people died


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->