துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 4,300க்கும் அதிகமானோர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4300க்கும் மேல் அதிகரித்துள்ளது.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரிய எல்லையில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள காசியான்டெப் நகரில் நேற்று அதிகாலை 4.17 மணியளவில் 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லை நகரங்களில் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. 

இதில் துருக்கியின் காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், தியர்பகீர், அடானா, மாலத்யா, கிலிஸ் உள்ளிட்ட நகரங்களில் வானுயர குடியிருப்பு கட்டிடங்கள், அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

இதேபோல், சிரியாவில் அலெப்போ, லதாகியா, ஹமா மற்றும் டார்டஸ் உள்ளிட்ட நகரங்கள் கடுமையான பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து நாசமாகியுள்ளன. மேலும் இந்த நிலநடுக்கத்தின்போது வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து துருக்கியில் நேற்று 7.5 மற்றும் 6.0 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,300-க்கு மேல் உயர்ந்துள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைத்தொடர்ந்து மேலும் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி துருக்கி மற்றும் சிரியாவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Over 4300 killed in turkey sriya earthquake


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->