பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான், இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில் 98 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிட்டர் அளவுகோலில் 4.7 பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இஸ்லாமாபாத், ராவல் பிண்டி, லோயர்  உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பாகிஸ்தானில் இந்த மாதம் தொடக்கத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்தியா மற்றும் யுரேசிய தகடுகளின் எல்லையில் பாகிஸ்தான் அமைந்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistan earthquake People panic


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->