இலங்கையில் பதற்றம் குறையாத நிலையில், புதிய அதிபர் இன்று பதவியேற்பு.!! - Seithipunal
Seithipunal


இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காரணாத அளவு உயர்ந்தது. மேலும் உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக, பிரதமராக இருந்த மகிந்த ராசபக்ச கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்பிறகு, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அதிபர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, நேற்று தேர்தல் நடந்து முடிந்தது. 110 வாக்குகள் பெறுபவர் வெற்றி பெறலாம் என்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் 134 வாக்குகளை பெற்று ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவியேற்க உள்ளார். இலங்கையில் மக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranil Wickremesinghe will be sworn the president of sri lanka


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->