காதலுக்கு எதிர்ப்பு! ரொட்டியில் வேஷம் கலந்து குடும்பத்தினர் 13 பேரை விஷம் வைத்து கொன்ற இளம்பெண்! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கைபத்கான் புரோகி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி, அவர்கள் அனைவரும் அடுத்தடுத்ததாக உயிரிழந்தனர். 

பிரேத பரிசோதனை மூலம் அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது, இதனால் பரபரப்பு முளைத்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர், அப்போது எதிர்பாராத சதிகாரம் வெளிப்பட்டது. 

உயிரிழந்தவர்களில் ஒருவர், தனது காதலன் ஒருவரை மனதில் வைத்து வந்தார். ஆனால், அவரது குடும்பத்தினர், குறிப்பாக பெற்றோர், இந்த காதலை கடுமையாக எதிர்த்தனர். திருமணத்தை மறுத்த குடும்பத்தினரிடம் ஏற்பட்ட ஆத்திரத்தில், அந்த இளம்பெண் தனது காதலனின் உதவியுடன் விஷம் வைத்து, தன் குடும்பத்தையே அழிக்க முடிவு செய்தார்.

அந்த விஷத்தை கோதுமை மாவில் கலந்ததன் காரணமாக, அந்த வீட்டு உறவினர் அனைவரும் ரொட்டி சமைத்து சாப்பிட்டு விஷம் உடலின் மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். 

போலீசார் இளம்பெண்ணையும், இந்த கொடூர சதிக்குத் துணை நிற்கிய அவரது காதலனையும் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் 13 பேரின் கொலை செய்தி மக்கள் மனதில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Resistance to love The young woman killed 13 family members with poison


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->