உக்ரைன் ராணுவத்திற்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அதிபர் ஜெலன்ஸ்கி.!! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம் 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் ஏராளமான ராணுவ தளங்கள் மற்றும் போர் தளவாடங்களை ரஷ்ய ராணுவம் அழித்து தொடர்ந்து முன்னேறி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்-வை ரஷ்ய ராணுவம் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருகிறது. 

ரஷ்ய ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் 4300 ரஷ்ய வீரர்கள் கொல்லப் பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் ரஷ்ய படைகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால் உக்ரைன் ராணுவத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் ஆர்வமுள்ள நபர்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். 

பொதுமக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு ரஷ்ய படைகளை எதிர்கொள்வதற்கு தயார் படுத்தியுள்ளனர். உக்ரைன் வீரர்கள் சோர்ந்து போகாமல் இருப்பதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறார். தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றிய வரும் அவர் நாட்டை பாதுகாக்க வீரர்கள் உத்வேகத்துடன் தொடர்ந்து போராடும் படி கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும், ரஷ்யாவிற்கு எதிராக போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது என அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். அதன்படி, மாத ஊதியமாக ஒரு லட்சம் உக்ரேனிய ஹிருன்யா - இந்திய பதிப்பில் ரூபாய் 2.52 லட்சம் வழங்கப்படும் என அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Salary increase for Ukiraine soldiers


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->