அதிர்ச்சி!...ரூ.4,200கோடி மதிப்பில் பணம், தங்கம் கண்டுபிடிப்பு!
Shock money and gold worth rupees 4200 crore found
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த போர் தொடங்கி ஓராண்டினை நிறைவு செய்துள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை தாக்கி வந்தனர். இந்த சூழ்நிலையில் பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது, பெய்ரூட்டில் உள்ள முக்கிய மருத்துவமனையான அல்சஹல் மருத்துவமனைக்கு நேராக பதுங்கு குழி உள்ளதாகவும், இந்த இடம் ஹசன் நஸ்ரல்லாவின் ரகசிய பதுங்கு குழி என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், இந்த பதுங்கு குழியில் ஏராளமான தங்கம், பணம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள அவர், அதன் மதிப்பு 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறியுள்ளார். இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,200கோடி என்ற மதிப்பில் இங்கு பணம் மற்றும் தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் லெபனானை மறு கட்டமைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Shock money and gold worth rupees 4200 crore found