கனடா : எட்மண்டனில் சீக்கிய இளைஞர் சுட்டுக்கொலை.! - Seithipunal
Seithipunal


கனடாவின் எட்மண்டனில் சீக்கிய இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

வட அமெரிக்க நாடான கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சன்ராஜ் சிங்(24) என்ற சீக்கிய இளைஞர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் எட்மன்டன் நகரில் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் சன்ராஜ் வாகனத்தை மறித்து, அவரை துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து இந்த துப்பாக்கி சூடு குறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலை எடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய சன்ராஜுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட

இருப்பினும் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் இந்த துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த 3-ஆம் தேதி ஒன்டாரியோ மாகாணத்தில் 21 வயதான பவன்பிரீத் கவுர் என்கிற சீக்கிய பெண் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டது  குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sikh youth shot dead in Canada Edmonton


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->