பாகிஸ்தானுடன் போர் பயிற்சி ஈடுபட உள்ளதாக வெளியான தகவலுக்கு இலங்கை கடற்படை மறுப்பு.!
Srilanka refused that war drill with pakistan
இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், சீனாவின் 'யுவான் வாங்-5' உளவு கப்பல் நாளை இலங்கை வரும் நிலையில் 22-ந் தேதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது.
இதனால் இந்தியா மற்றும் இலங்கை இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானின் பி.என்.எஸ். தைமூர் போர்க்கப்பலுக்கு வங்காளதேசத்தின் சட்டகிராம் துறைமுகத்தில் அனுமதி மறுத்ததால், கொழும்புத் துறைமுகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் கடற்படையும், இலங்கை கடற்படையும், கூட்டு போர்ப்பயிற்சி மேற்கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இலங்கை கடற்படை இது தவறான தகவல் என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.
English Summary
Srilanka refused that war drill with pakistan