நைஜீரியாவில் சோகம்!...லாரி வெடித்து சிதறியதில் 48 பேர் பலி!...நடந்தது என்ன?
Tragedy in nigeria lorry explosion kills 48 what happend
நைஜீரியாவில், எரிபொருள் ஏற்றிச்சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிய கோர விபத்தில் 2 லாரிகளும் வெடித்து சிதறியதில்,48 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவில் நைஜர் மாகாணம் அமைந்துள்ளது. இந்தநிலையில் இந்த மாகாணத்தின் கெயி நகரில் உள்ள நெடுஞ்சாலையில் எரிபொருளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது, சாலையின் எதிரே வேகமாக வந்த மற்றொரு லாரி எரிபொருள் ஏற்றிச்சென்ற லாரி மீது மோதி பயங்கர விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் 2 லாரிகளும் வெடித்து சிதறிய சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்த நிலையில், மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், போலீசார் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நைஜீரியாவில், எரிபொருள் ஏற்றிச்சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிய கோர விபத்தில் 2 லாரிகளும் வெடித்து சிதறியதில்,48 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tragedy in nigeria lorry explosion kills 48 what happend