பாடகர் மனோவின் மகன்களை தாக்கியது யார்?...வெளியானது புதிய சிசிடிவி காட்சி! - Seithipunal
Seithipunal


சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்ற இரண்டு சிறுவர்களை, மனோவின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர், சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படும் நிலையில் இந்த தாக்குதலால் 16 வயது சிறுவனுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியானது. 

தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மனோவின் மகன் மதுபோதையில் சிறுவர்களை தாக்கியதாக  தகவல் வெளியானதை தொடர்ந்து , வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோவின் மகன்களின் நண்பர்களான விக்னேஷ் (28), தர்மா (26) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள மனோவின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில் மனோவின் மகன்கள் தரப்பிலும் தங்களை எதிர்தரப்பினர் தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சிறுவர்களை மனோவின் மகன்கள் போலீசார் முன்னிலையில் தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சம்பவத்தன்று பாடகர் மனோவின் மகன்கள் ஜாகீர், ரபீக் ஆகியோரை 4 மோட்டார்சைக்கிளில் வந்த 8 பேர் சேர்ந்து உருட்டு கட்டை, கற்களை கொண்டு தாக்கும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் மனோவின் மகன்கள் இருவரையும் 16 வயது சிறுவன் உள்பட 8 பேர் சேர்ந்து கல், கட்டையால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Who attacked singer Mano's sons New CCTV footage released


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->