அதிரடியாக உயர்ந்த தக்காளி விலை - அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தக்காளி விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன் படி சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த மாதம் இறுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது. 

ஆனால், கடந்த சில நாட்களில் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.70 வரை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.90 வரை விற்பனையாகிறது. 

இதே வெளி சந்தை மற்றும் சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து வியாபாரிகள் தெரிவித்ததாவது:- "ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தக்காளி வரத்து வெகுவாக குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomatto price increase


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->