வரலாற்று கதையில் ஷங்கருடன் இணையும் நடிகர் ரஜினிகாந்த் - வெளியானது மாஸ் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து வேட்டையன், கூலி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே நடிகர் ரஜினி தன்னுடைய கடைசி படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதுதான் ரஜினியின் கடைசி படம் என்றும் பேசப்பட்டது. ஆனால், தற்போது வேறு ஒரு தகவல் வெளியாகி ரஜினி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது, கூலி படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஷங்கருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே எந்திரன், எந்திரன் 2, சிவாஜி உள்ளிட்ட படங்களில் சங்கர் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் நல்ல ஹிட் ஆனது. இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் வேள்பாரி எனும் நாவலை ரஜினியை வைத்து வைத்து இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவை வைத்து இயக்க இருந்தது குறிப்பிடத்தக்கது. வரலாற்று படமான இது ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இந்தப் படத்தை ஈரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor rajinikant again work with director sankar


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->