சினேகாவுக்கு ஏற்பட்ட விபத்து - மனம் திறக்கும் நடிகர் ஸ்ரீகாந்த்..! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் 'புன்னகை இளவரசி' என்று ரசிகர்களால் அழைக்கப் படுபவர் நடிகை சினேகா. இவர் தமிழின் முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார். இவர் மார்க்கெட் நன்றாக இருந்தபோதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். 

42 வயதாகும் சினேகா தற்போதும் நல்ல அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது விஜயின் 'கோட்' படத்திலும் அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் தனக்கும், சினேகாவுக்கும் படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்து குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.

கல்லூரி நண்பர்களுக்கு இடையேயான நிகழ்வுகளைக் கதைக்களமாக கொண்ட 'ஏப்ரல் மாதத்தில்' திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், சினேகா, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்த போது தான் இருவருக்கும் விபத்து ஏற்பட்டது என்றும், அதை தன்னால் எப்போதுமே மறக்க முடியாது என்றும் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விபத்தில்  சிக்கிய சினேகாவின் முகுகெலும்பு உடையும் நிலையில் இருந்ததாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இருவரும் ஒன்றாக விபத்தில் சிக்கினாலும், தனி தனியாக வேறு வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இருவருக்கும் உடல்நிலை தேறிய பின்னரே அந்த படத்தை முடித்துக் கொடுத்ததாகவும் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். 

நண்பர்களாக இருக்கும் ஸ்ரீகாந்தும், சினேகாவும் எப்படி காதலர்களாக மாறுகின்றனர்? அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பது தான் 'ஏப்ரல் மாதத்தில்' படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Srikanth Opens Up About Sneha Shocking Accident


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->