பிரபல நடிகை வீட்டில் கைவரிசை காட்டிய வேலைக்கார பெண்! போலீசாரிடம் சிக்கியது எப்படி? - Seithipunal
Seithipunal


நாடோடிகள் 2, காதல் கண் கட்டுதே போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. இவரது சொந்த ஊர் கோயம்புத்தூர், வடவள்ளி அவுத்தி மருத்துவமனை மருதம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் அவரது தாய் விஜயலட்சுமி உடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் 2000 பணம் திருடு போனதாக அதுல்யா ரவியின் தாய் வீடு முழுவதும் தேடி பார்த்துள்ளார். இருப்பினும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இவர்களது வீட்டில் பணியாற்றும் குளத்துபாளையத்தை சேர்ந்த செல்வி (வயது 46) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது செல்வி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில் செல்வி தான் தோல்வியுடன் தனது தோழியுடன் சேர்ந்து பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியதாக ஒப்புக்கொண்டார். 

இதனை தொடர்ந்து போலீசார் செல்வி மற்றும் அவரது தோழி சுபாஷினி (வயது 40) இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1500 பறிமுதல் செய்தனர். இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்களிடம் பாஸ்போர்ட் எங்கு வைத்திருக்கிறீர்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coimbatore famous actress house stealing 2 arrested 


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->