BSP மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை - கதறி அழுத பா.ரஞ்சித்! பதற்றத்தில் தலைநகர்! - Seithipunal
Seithipunal


சென்னை : பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் இன்று இரவு 7.30 மணியளவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரின் வீட்டின் அருகிலேயே இரு சக்கரத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதனையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இரவு சுமார் 8.05 மணியளவில் உயிரிழந்தார். அவரின் உறவினர்கள், கட்சி தொண்டர்கள் மருத்துவமனையில் பெரும் சோகத்துடன் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் மரணம் குறித்து தகவலறிந்து மருத்துவமனை வந்த இயக்குனர் பா.ரஞ்சித் கத்தி கதறி அழுதது மேலும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகதலைவர் ஜான் பாண்டியன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும், தமிழக அரசியல் களத்தில் அவரது இழப்பு மிகப்பெரிய இழப்பு என்றும். அவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழக பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.

மேலும்,கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்திட வேண்டுமென தமிழக அரசை ஜான் பாண்டியன் கெட்கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pa Ranjith cry Bahujan Samaj Party Armstrong death


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->