பாலிவுட் நடிகைக்கு, படப்பிடிப்பு தளத்தில் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அவசர சிகிச்சை.! - Seithipunal
Seithipunal


பாலிவுட்டின் முக்கிய நடிகையாக இருந்து வருபவர் தீபிகா படுகோனே. நடிகை தீபிகா படுகோனே தற்போது பிரபாஸுக்கு ஜோடியாக இணைந்து நாக் அஸ்வின் இயக்குகின்ற ஒரு படத்தில் நடித்து வருகின்றார். இன்று இந்த படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.

அப்போது தீபிகா படுகோனுக்கு படப்பிடிப்பு தளத்திலேயே நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்ததை தொடர்ந்து, அவரது உடல் நலம் தற்போது தேறியுள்ளது.

தற்போது நடிகை தீபிகா படுகோனே மருத்துவர்களின் கண்காணிப்பில் ஒரு ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறாராம். அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதை அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் உடல் நலம் தேறி வர வேண்டும் என்று சமூக வலைதள பதிவுகளில் பிரார்த்தித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dheepika padukone getting heart attack in shooting spot


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->