அடுத்த படத்தில் திரிஷாவுடன் நடிப்பேன் - போட்டுடைத்த நடிகர் மன்சூர் அலிகான்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷாவைப் பற்றி அவதூறு பரப்பும் விதமாக நடிகர் மன்சூர் அலிகான் பேசியுள்ளார். இதற்கு அவர் பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்ப்பு வலுத்ததையடுத்து, அவருக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. 

அத்துடன், அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையமும் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் இன்று காலை சென்னையில் தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது:-

"இதில் நான் தவறு எதுவும் செய்யவில்லை. அதனால், மன்னிப்பு கேட்க முடியாது. நடிகர்கள் சங்கம் தனக்கு அனுப்பியுள்ள கண்டனத்திற்கு எச்சரிக்கை விடுத்த அவர், அதை வாபஸ் பெற வேண்டும் என்று பேசியுள்ளார்.

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து நடிகை த்ரிஷா ட்வீட் செய்த போதே, மன்சூர் அலிகானுடன் இனி வரும் நாட்களில் இணைந்து நடிக்க மாட்டேன் என்றுக் கூறியிருந்தது குறித்து, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, “ஒரு நடிகனின் கதாபாத்திரமாக அந்தக் காட்சியை நான் சாதாரணமாகத்தான் சொன்னேன். தவறாக எதுவும் சொல்லவில்லை. த்ரிஷாவுடன் கண்டிப்பாக அடுத்தப் படத்தில் நடிப்பேன்” என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mansoor alikhan press meet


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->