நீண்ட நாள் கனவு நிறைவேறியது.. வடிவேலுவுடன் நெகிழ்ச்சியடைந்த மாரி செல்வராஜ்.!
Mariselvaraj about vadivelu
சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய மு.க.ஸ்டாலினை இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் நடிகர் பஹத் பாசில் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவர்களுடன் உதயநிதி ஸ்டாலினும் அங்கு இருந்தார். இவர்களது கூட்டணியில் படம் வெளியாகப் போவதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் அதற்கான அறிவிப்பு வெளியாகியது.
படம் குறித்து வெளியானஅந்த போஸ்டரில் படத்தின் பெயர் மாமன்னன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். அத்துடன் இந்த படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாஸில் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். முதல் முறையாக ரகுமான் மாரி செல்வராஜ் படத்திற்கு இசையமைக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், வடிவேலுவின் புகைப்படத்தை வெளியிட்டு, அவரை வைத்து படம் இயக்குவது தனது நீண்ட நாள் கனவு என்றும், அது தற்போது நிறைவேறிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
Mariselvaraj about vadivelu