நான் இனி இந்தியாவுக்குத் திரும்பி வரமேட்டேன் - சாட்டை பட நடிகை ட்வீட்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் சாட்டை என்ற திரைப்படத்தில் மூலம் 'அறிவழகி' என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை மகிமா நம்பியார். அதனைத் தொடர்ந்து குற்றம் 23, அசுர குரு, மகாமுனி ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையானார்.

இவர் தற்போது இயக்குனர் சி.எஸ் அமுதன் இயக்கத்தில் ரத்தம் என்ற திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் ரம்யா நம்பீசன், நந்திதா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிமா நம்பியார் தூங்கிக் கொண்டிருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ரத்தம் படக்குழுவினர் மட்டும் கடினமான உழைப்பாளிகள் அல்ல நடிகர்களும் சமமான அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். மகிமா நம்பியார் அவருடைய பணியை தீவிரமாக செய்துள்ளார் என்று கிண்டலாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு நடிகர் விஜய் ஆண்டனி அவங்க கடின உழைப்பை பார்க்கும் போது அப்படியே என்ன பாக்குர மாதிரியே இருக்கு என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனியின் பதிவுக்கு பதில் அளித்த நடிகை மகிமா நம்பியார் 'என்னோட மானம் போச்சு. என்ன நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க. கடவுளே இந்த பதிவுக்கு பிறகு நான் இந்தியாவுக்கு வர விரும்பவில்லை' என்று ஜாலியாக பதிவிட்டுள்ளார். தற்போது இந்த ட்விட்டர் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ratham movie actors tweets Viral


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->