ஆடியோ லாஞ்ச்சில் பெற்றோரை உதாசீன படுத்திய விஜய்.. தாய் ஷோபனா பேட்டியில் புட்டு புட்டு வைத்த உண்மைகள்.!  - Seithipunal
Seithipunal


தளபதி விஜய்க்கும் அவரது பெற்றோருக்கும் இடையே மனக்கசப்பு நிலவுவதாக கோலிவுட் வட்டாரங்களில் சமீபகாலமாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்தத் தகவல்களில் உண்மை இருக்கும் என்று நினைக்குமளவிற்கு விஜயின் நடவடிக்கைகளும் இருக்கிறது.

அவர் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்த வீட்டிலிருந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வேறொரு வீட்டில் வசித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஜனவரி மாதம்  நடந்த வாரிசு பட விழாவிலும் அவர் தனது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபனா ஆகியோரை கண்டுகொள்ளவில்லை என சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயின் தாயார் சோபனா இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இது பற்றி அந்த பேட்டியில் கூறிய அவர் ரசிகர்களுக்காக நடத்தப்பட்ட விழாவில் குடும்பத்தினரை கவனிக்கவில்லை என்று சொல்வது வேடிக்கையாக இருப்பதாக கூறினார்.

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் ரசிகர்களுக்காக நடத்தப்பட்ட விழாவில் எங்களை கண்டுகொள்ளாதது  எங்களுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனக் கூறினார். விஜய் தனது ரசிகர்கள் மீது வைத்திருந்த பாசத்தை கண்டு நாங்கள் ஆச்சரியப்பட்டோம் எனவும் தெரிவித்திருக்கிறார். தேவையில்லாமல் பரப்பப்படும் வதந்திகளுக்கு ஏன் பதிலளிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். ஒரு விஷயம் உண்மையில்லாத பட்சத்தில் அதற்காக ஏன் பதிலளிக்க வேண்டும்? என்று அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் ஷோபனா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay mother shobana puts a full stop to the long rounding rumour


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->