கடும் மன உளைச்சலில் இருக்கேன் - உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் ஆண்டனி பரபரப்பு மனு தாக்கல்! - Seithipunal
Seithipunal



நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வெளியாகிய பிச்சைக்காரன் 1ம் பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தை நடிகர் விஜய் ஆண்டனியே இயக்கி நடிக்கிறார். 

படத்தை விஜய் ஆண்டனியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி பிக்சர்ஸ் மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.


 
இந்த நிலையில், பிச்சைக்காரன் 2 ஆம் பாகத்தை தடை செய்ய கோரி  ராஜகணபதி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

அவரின் மனுவில், 2016-ஆம் ஆண்டு வெளியான 'ஆய்வுக் கூடம்' திரைப்படத்தின் கருவையும், வசனத்தையும் 'பிச்சைக்காரன் -2' திரைப்படத்திற்கு பயன்படுத்தியுள்ளதால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும். நஷ்டஈடாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பிச்சைக்காரன்-2 படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்ததால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று, நடிகர் விஜய் ஆண்டனி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

மேலும், "படம் வெளியாவதை தடுக்க வேண்டுமென்றே உள் நோக்கத்துடன் கடைசி நேரத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் தான் கடும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நடிகர் விஜய் ஆண்டனி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayantony chennaihc pichaikaran two movie issue


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->