சர்க்கரை நோய்களுக்கு மருந்தாகும் வெந்தய நீர்.! - Seithipunal
Seithipunal


ஏராளமான பொதுமக்கள் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக அனைத்து விதமான இயற்கை வழிமுறைகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இப்படி செய்தும் சிலருக்கு சர்க்கரை நோய் குறையாமல் இருக்கிறது. இந்த நிலையில் சர்க்கரை நோயை குறைப்பதற்கு வெந்தய தண்ணீர் அருமருந்தாக உள்ளது.

வெந்தயத்தில் இயற்கையாகவே இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் பண்புகள் உள்ளது. அவற்றில் உள்ள நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் சபோனின்கள் செரிமானத்தை தாமதப்படுத்துகின்றன.

இவை கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதைக் குறைக்கின்றன மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கின்றன. வெந்தய விதைகள் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவாகும்.

ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அதனை மறுநாள் காலையில் வடிகட்டி குடிக்க வேண்டும். இது உடலுக்கு மிகவும் நல்லது. பெண் குழந்தைகளுக்கும் மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்யும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make vendhayam water


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->