பள்ளி மாணவர்கள் டார்கெட்! கஞ்சா விற்பனை 17 கிலோ கஞ்சா பறிமுதல்! - Seithipunal
Seithipunal


திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து போதைப்பொருள் கடத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போலீசார் ரயில் நிலையப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சந்தேகத்து இடமாக நின்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர்.

அப்போது அந்த வாலிபர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. அவரிடமிருந்து 8 பிளாஸ்டிக் பைகளில் இருந்து 17 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த வாலிபரை கைது செய்து விசாரித்த போது அவர் பெயர் அஜிபர் ஷேக் என்பதும் அவர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. கறி மசாலா தயாரிக்கும் கம்பெனியில் பணிபுரிந்துவந்த அந்த வாலிபர். ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கொள்முதல் செய்து கேரளா கொண்டு வந்து விற்பனை செய்ய தொடங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரி பேருந்து நிலையம் பகுதிகளில் மாணவ மாணவிகளை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு உடந்தையாக செயல்பட்டவர்களை காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17 kg ganja smuggled from Andhra Pradesh seized at Thiruvananthapuram railway station


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->