குடும்பத்தை காப்பாத்துவதே கஷ்டம்.. அரசாங்கம் என்ன செய்யும்? - மதுரை ஆதீனம்  - Seithipunal
Seithipunal


அரசாங்கத்தால் மட்டுமே அனைத்து பிரச்சினைகளையும் தடுக்க முடியாது என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது;-

"பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணித்து வளர்க்க வேண்டும். ஒரு குடும்பத்தை கட்டி காப்பாற்றுவதே கஷ்டமாக உள்ளது. அப்படி இருக்கும்போது அரசாங்கம் என்ன செய்ய முடியும்? மத்திய அரசோ, அல்லது பிரதமரோ என்ன செய்வார்கள்?

ஒரு பழைய பாடலில், 'பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா, பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா?' என்று வரிகள் வரும். தங்கள் குழந்தைகளை கண்காணித்து வளர்க்க வேண்டிய கடமை பெற்றோருக்கு உள்ளது. 

பிள்ளைகளை சமய ஒழுக்கம் உள்ளவர்களாகவும், சமுதாய ஒழுக்கம் உள்ளவர்களாகவும் வளர்க்க வேண்டும்." என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

madurai adheenam press meet in nellai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->