மருத்துவமனை மீது தாக்குதல் - கொல்கத்தாவில் 19 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்து, வரும் 23-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, பல்வேறு பகுதிகளிலும் பயிற்சி மருத்துவர்கள் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பயிற்சி பெண் மருத்துவர் கொலையை கண்டித்து கொல்கத்தா ஆர்.ஜி.கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மர்ம நபர்கள் சிலர் நேற்று நள்ளிரவு அத்துமீறி நுழைந்து மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு, நர்சிங் ஸ்டேஷன், மருந்துக் கடை மற்றும் வெளிநோயாளர் பிரிவின் சில பகுதிகளை அடித்து சேதப்படுத்தினர். 

இந்த தாக்குதலில் போலீசார் உள்பட ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக கொல்கத்தா போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் அனைவரும் வரும் 22ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

19 peoples arrested for attack hospital in kolkatta


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->