சோகம்.. காருக்குள் சிக்கி 2 சிறுமிகள் பலி.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டம் தமர்குடா கிராமத்தில் நேற்று திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்களின் குழந்தைகள் இரண்டு பேர் நேற்று மதியம் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தனர்.

ஆனால், நீண்ட நேரமாகியும் சிறுமிகள் வீட்டிற்கு வராததால் பெற்றோர், உறவினர்கள் தேட ஆரம்பித்தனர். அப்போது, நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினரின் காருக்குள் சிறுமிகள் இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தது தெரிய வந்தது.

உடனடியாக உறவினர்கள் கார் கண்ணாடியை உடைத்து சிறுமிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இதைக்கேட்ட உறவினர்களும் , சிறுமிகளின் பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர்.

காருக்குள் போதிய காற்று செல்லாததால் சிறுமிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காருக்குள் சிக்கிய சிறுமிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 girls died in telungana for trapped car


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->