விளையாடிக்கொண்டிருந்தபோது நேர்ந்த சோகம் - காரின் கதவு மூடி 4 குழந்தைகள் பலி.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரேலி மாவட்டம் ரந்தியா கிராமத்தில் நேற்று முன்தினம் ஒரு பண்ணைக்கு வேலைக்கு சென்ற பெற்றோர், தங்களது 7 குழந்தைகளை விளையாடுமாறு விட்டுவிட்டு சென்றுள்ளனர். 

அவர்களில் 4 பேர் பண்ணை வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த உரிமையாளரின் காரில் நுழைந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக காரின் கதவு மூடியதால் காரில் சிக்கிக்கொண்ட 4 குழந்தைகளும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு காரிலேயே உயிரிழந்தனர்.

குழந்தைகளின் பெற்றோர் மற்றும் கார் உரிமையாளர் மாலை வேலை முடிந்து திரும்பி வந்தபோது, குழந்தைகள் காரில் சிக்கி மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கரை திறந்து குழந்தைகளை பார்த்ததில் அவர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 childrens died for breathing problam in gujarat


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->