சோகம்... மின்னல் தாக்கி 5 பேர் பலி; 18 மாணவர்கள் படுகாயம்.!  - Seithipunal
Seithipunal


சமீப காலமாகவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் உள்ள மதுபானி மாவட்டம் பத்னாகா கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த நபர்கள் மீது மின்னல் தாக்கியது. 

இந்த சம்பவத்தில் இரண்டு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர், படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதே போல் துமாரியா கிராமத்தில் இரண்டு பெண்கள் மீது மின்னல் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். 

இதனால், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இதற்கிடையே போஜ்பூர் மாவட்டம் பர்கா கோன் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியைச் சேர்ந்த 18 மாணவர்கள் மின்னல் தாக்கி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

படுகாயமடைந்த மாணவர்கள் ஆரா நகரில் உள்ள சர்தார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 peoples died and 18 peoples injured for lightning attack in bihar


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->