திருமணத்திற்கு சென்று திரும்பியபோது பரிதாபம்.! கார் விபத்தில் 6 பேர் பலி.!
6 killed in car accident in haryana
ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் திருமணத்திற்கு சென்று திரும்பியபோது மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 6 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் அடம்பூரில் உள்ள உத்சவ் கார்டனில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 7 இளைஞர்கள் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்பொழுது அடம்பூர்-அக்ரோகா சாலை வேம்பு அட்டா அருகே கார் வந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மரம் மற்றும் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 6 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
விபத்தில் இறந்த இளைஞர்கள் கிஷன்கர், காரா மற்றும் பர்வாலா கிராமங்களில் வசிக்கும், சாகர், ஷோபித், அர்வித், அபினவ், தீபக் மற்றும் அசோக் என அடையாளம் காணப்பட்டனர், மேலும் படுகாயமடைந்த பூனேஷ் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்றும், இவர் அக்ரோஹாவில் உள்ள மகாராஜா அக்ரசென் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
6 killed in car accident in haryana