டெல்லி விமான நிலையத்தில் 6 கிலோ போதைப்பொருள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் போதை பொருள் கடத்தி வந்ததாக ஜெர்மன் வாழ் இந்தியரை சி.பி.ஐ. கைது செய்து விசாரணை செய்து வருகிறது.

சமீப காலமாகவே வெளிநாடுகளில் இருந்து விண்மனத்தின் மூலம் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க சுங்கத் துறை அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும் பல வழிகளில் தங்கம் கடத்தப்பட்டு தான் வருகிறது.

இந்த நிலையில், கத்தார் நாட்டின் தோகாவிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் கோகைன் போதை பொருள் கடத்தி வருவதாக சி.பி.ஐ.,க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் படி சிபிஐ போலீசார் டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பயணிகளிடம் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், ஜெர்மன் வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபரிடம் இருந்து 6 கி.கி. கோகைன் போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த சி.பி.ஐ.,போலீசார் அந்த நபரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சர்வதேச மதிப்பு ரூ. 30 கோடி என்று தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 kilo drugs seized in delhi airport


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->