அசாம் வெள்ளம் : ஆறு லட்சம் மக்கள் பாதிப்பு!
6 Lakhs Peoples Suffered in Assam Flood
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி மத்திய வங்கக்கடலுக்கும், வங்கதேசத்துக்கு இடையே கரையாக கடந்த ரெமல் புயலால் மேற்கு வங்க மாநிலமும், வடகிழக்கு மாநிலங்களும் தொடர்ந்து கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அந்த மாநிலங்களில் தொடர்நது பெய்து வரும் கனமழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில் பல இடங்களில் உள்ள முக்கிய ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் இந்த காட்டாற்று வெள்ள நீர் குடியிருப்பு பகுதியை முழுவதும் சூழ்ந்துள்ளதால் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
இன்னும் அங்குள்ள எல்லா முக்கிய ஆறுகளிலும் குறிப்பாக கோபிலி, பராக், குஷியாரா ஆகிய ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாகோன் என்ற ஒரு மாவட்டத்தில் மட்டும் சுமார் 2.79 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் 10 மாவட்டங்கள் வெள்ளத்தால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனிடையே வெள்ளத்தில் சிக்கிய நாகோன் மாவட்ட மக்களில் இதுவரை 40 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அசாமில் புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
English Summary
6 Lakhs Peoples Suffered in Assam Flood