திமுக அமைச்சர்கள் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் வழக்கில் தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு!
DMK Ministers case Chennai HC Order
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்குகளில், தமிழக அரசு தரப்பில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க கோரிய மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதுகுறித்த அந்த மனுவில், நீதியின் நலனை பாதுகாக்க, புலன் விசாரணை அதிகாரியும், அரசு தரப்பு வழக்கறிஞரும் எந்த அரசியல் சார்பும் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
அதனால் இரு வழக்குகளையும் நடத்த அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
DMK Ministers case Chennai HC Order