பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மேலும் 7 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே பகுதிக்கு அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் நேற்று வழக்கம் போல் 8 முதல் 11 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பள்ளியில் மதிய உணவை உட்கொண்டனர். அதன்பின்னர் அவர்களுக்கு தலைச்சுற்றல், குமட்டல், தலைவலி மற்றும் வயிறு வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆசிரியர்கள் மாணவர்களை மீட்டு கல்வா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில், மேலும் 7 மாணவர்கள் இன்று அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, அனைத்து மாணவர்களும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், உடல்நிலை சரியென கண்டறியப்பட்டால் இன்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே அதிகாரிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் மாதிரிகளை பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 students admitted hospital in maharastra


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->