நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு.. 75 ரூபாய் நாணயம் அறிமுகம் செய்த பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை முன்னிட்டு 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார் 

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதற்காக மத்திய அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவதை முன்னிட்டு மத்திய அரசு 75 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் 35 கிராம் எடை கொண்ட 75 ரூபாய் நாணயம் 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் ஜிங்க் கலவை கொண்டு உருவாக்கப்படுகிறது.

இந்த புதிய நாணயத்தின் ஒரு புறம் அசோக சின்னமும், அதன் கீழே சத்தியமேவ ஜெயதே என்ற வார்த்தையும் இடம் பெறுகிறது. இடது புறத்தில் பாரத் என்ற வார்த்தை தேவனகரிலும், இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலத்தில் வலது புறமாக இடம்பெறுகிறது. இந்த நாணயத்தின் மற்றொரு புறத்தில் நாடாளுமன்ற கட்டிடத்தின் படம் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டுள்ள நிலையில் புதிய 75 ரூபாய் நாணயம் மற்றும் புதிய தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

75 ruppes coin introduce PM modi


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->